கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

போண்டி கடற்கரை

ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரை உலகில் மிகவும் பிரசித்தி பெற்றது.  சுற்றுலாப் பயணிகளால் களை கட்ட தொடங்கியுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 11:11 am

தினமணி

ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரை உலகில் மிகவும் பிரசித்தி பெற்றது. சுற்றுலாப் பயணிகளால் களை கட்ட தொடங்கியுள்ளது.

இந்த நாட்டில் மக்கள் அதிகம் வசிக்கும் சிட்னி நகரில் சுற்றுலாத் தலங்களில் முக்கியமானது போண்டி கடற்கரை. சிட்னியில் இருந்து 7 கி. மீ. தொலைவில் இருக்கும் புறநகர் பகுதியான "நியூ சௌத் வேல்ஸ்' என்ற இடத்தில் இருக்கிறது.

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கடற்கரையின் ஓரத்தில் மக்கள் நடக்கும் வகையில் ஓற்றையடிப் பாதை போன்று ஒரு பாதை அமைத்திருக்கிறார்கள். அது 3 கி.மீ. இருக்கும்.

கடற்கரை ஓரம் மலைப் பாங்கான இடம். முன்னொரு காலத்தில் கடற்கரை ஓரத்தில் உயரமான மலை இருக்கும்போலும். இன்று அந்த மலை பாறையாகிப் போனது. ஆதலால், பாம்பு போல் வளைந்து வளைந்து பாதை செல்லும். உயரமான இடம், தண்ணீர் கால்களை நனைக்கும் இடம்.

ஆண்டுதோறும் நவம்பர்- டிசம்பர் மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இங்கு வந்துவிடுவார்கள். சர்வதேசக் கலைஞர்களும் இதற்குள்அடக்கம். அங்கு அவர்கள் வடித்த, செதுக்கிய சிற்பங்களை போண்டிகடற்கரையில் ஒரு கண்காட்சியாக வைப்பார்கள். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தக் கண்காட்சி நடக்கிறது.

கரோனாவால் 3 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்த ஆண்டு நடைபெற்றது.

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், இரும்பு, கம்பி, பிளாஸ்டிக் உள்படபல்வேறு பொருள்களில் செதுக்கிய சிற்பங்களை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.

போண்டி கடற்கரையின் சரித்திரத்தில் முதன்முதலாக அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்று பிரசித்தி பெற்றுவிட்டது. தோல் புற்றுநோயைத் தவிர்க்கும் விதமாக, பல ஆயிரம் பேர் நிர்வாணமாக நின்று புகைப்படம் எடுத்த ஓர் விழிப்புணர்வு நிகழ்ச்சிதான் அது.

பிரான்கிராம் என்ற பெண்மணி தோல் புற்றுநோய் தாக்கி அவதிப்பட்டார். ஒரு கையில் நோய் தாக்கியதால், அந்தக் கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுபோன்ற நிலை பிறருக்கு வராமல் இருக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இந்த நிகழ்ச்சியில் சேகரிக்கப்படும் நிதி தேசிய தோல் புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைக்குப் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

அமெரிக்காவின் புகழ் பெற்ற புகைப்பட நிபுணர் ஸ்பென்சர் துனிக் இந்தக் காட்சியைப் புகைப்படம் எடுத்தார். இப்போது நிர்வாணக் கடற்கரை என்ற பெயரையும் போண்டி கடற்கரை பெற்றுவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.