டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

விவசாயம் செய்வதற்கு வரிசை!

தெற்கு கொரியாவில் வெங்காயம்  விளைவிக்க  ஆட்கள் வேண்டும்   என்று  கேரளா அரசின் அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு  பெற்றுத்தரும்  நிறுவனத்திடம் சொல்ல...

News image
Updated On :7 நவம்பர் 2021, 12:30 am

தெற்கு கொரியாவில் வெங்காயம் விளைவிக்க ஆட்கள் வேண்டும் என்று கேரளா அரசின் அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் நிறுவனத்திடம் சொல்ல... அந்தக் கேரள நிறுவனம் தென் கொரியா வேலை வாய்ப்புகள் குறித்து அறிவிப்பு வெளியிட.... ஆன்லைனில் பதிவு செய்ய இளைய தலைமுறை குவிந்தனர். இதனால் கணினியில் கோளாறு ஏற்படவே நேரில் வாருங்கள்' என்று மறு அறிவிப்பு வெளிவர... சொன்ன இடத்தில் இளைய தலைமுறை குவிந்தனர். கியூ வரிசையில் நின்றனர்.

தென் கொரியாவின் வெங்காயம் வளரும் நிலங்கள் ஸினான், முஆன் தீவுகளில் உள்ளன. வெங்காய விவசாயத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ஒரு லட்சத்து பன்னிரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படுமாம். மாதம் 28 நாள் வேலை. காலை எட்டு மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை வேலை. தங்க வீடு வாடகைக்கு தானே பிடித்துக் கொள்ள வேண்டும். கொரியா உணவு இந்திய உணவிலிருந்து மாறுபட்டது. குளிர்... அதிகக் குளிர். அதுதான் கொரியாவின் காலநிலை. மைனஸ் 20 டிகிரி வரை வருமாம்.

இப்போதைக்கு 100 பேர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்களாம். எதிர்காலத்தில் மேலும் 1000 பேர்களை வெங்காய விவசாயத்தில் வேலை செய்ய அமர்த்துவார்களாம். கரோனா தடுப்பு மருந்து இரண்டு முறை போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.