ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

70 ஆயிரம் கி.மீ. பயணம்!

'ஆர்க்டிக்டெர்ன்' என்ற நூறு கிராம் எடையுடைய பறவை, இந்தப் பறவை ஆர்க்டிக், அண்டார்டிக் இடையே ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 70 ஆயிரம் கி.மீ. பயணித்து, உலகின் மிக நீண்ட பயணத்தை மேற்கொள்கிறது.

Published On :2 நவம்பர் 2025, 12:01 am IST

'ஆர்க்டிக்டெர்ன்' என்ற நூறு கிராம் எடையுடைய பறவை, இந்தப் பறவை ஆர்க்டிக், அண்டார்டிக் இடையே ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 70 ஆயிரம் கி.மீ. பயணித்து, உலகின் மிக நீண்ட பயணத்தை மேற்கொள்கிறது.

'பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே', 'நேஷனல் ஜியாகிராபிக் சொசைட்டி' ஆகியன நடத்திய ஆராய்ச்சியின்படி, 'ஆர்க்டிக்டெர்ன்கள் மற்ற பறவைகளைக் காட்டிலும் அதிகம் பறக்கின்றன.

இது கோடையின்போது ஆர்க்டிக்கில் கூடு கட்டி பின்னர் மீண்டும் சூரிய ஒளியை அனுபவிக்க, தெற்கு அண்டார்டிகாவுக்குச் செல்கிறது. தெற்கில் கோடைகாலம் முடிந்ததும் மீண்டும் வடக்கு நோக்கி பூமியை ஒரு முழு சுற்று பயணிக்கிறது. 30 ஆண்டு ஆயுளில் ஒரு ஆர்க்டிக்டெர்ன் மட்டும் 2.4 மில்லியன் கி.மீ. தொலைவு பயணிக்கிறது. வேறு விதமாக கூற வேண்டுமானால் இது பூமியிலிருந்து மூன்று முறை சந்திரனுக்குச் செல்வதற்கு சமம். காற்றின் பாதையில் வளைந்து பயணிக்கின்றன.

அதிக முயற்சி இல்லாமல் நீண்ட தூரம் பறக்கின்றன. இந்தப் பறவைக்கு அதன் நீண்ட, குறுகிய இறக்கைகள் மிக உதவியாய் உள்ளன. பயணத்தின்போதே கடலின் மேற்பரப்பில் உள்ள மீன்கள் போன்றவற்றைப் பிடித்துச் சாப்பிடுகின்றன. ஒரு துருவத்திலிருந்து மற்றொரு துருவத்துக்குப் பயணிப்பதால் ஆண்டுதோறும் இரு கோடை காலங்களை அது அனுபவிக்கிறது.அதன் இருப்பு முழுவதும் நிலையான பகல் நேரத்திலேயே கழிகிறது.' என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.