தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தெரியுமா?

உலகில் முதன்முதலில் படுக்கைகளும் தலையணைகளும் மரப்பலகைகளால் ஒன்றாக அமைந்திருந்தன.

News image
Updated On :29 ஜூன் 2025, 12:58 pm

DIN

உலகில் முதன்முதலில் படுக்கைகளும் தலையணைகளும் மரப்பலகைகளால் ஒன்றாக அமைந்திருந்தன. முதலில் சீனர்கள்தான் மரப்படுக்கைகளைத் தயாரித்துப் பயன்படுத்தினர். முதலில் படுக்கையும், தலையணையும் தனித்தனியே தயாரித்துப் பயன்படுத்தியவர்கள் கிரேக்கர்கள்.

-உ.இராமநாதன்

நான்கு மூட்டுகளைக் கொண்ட விலங்கு யானை.

பாண்டாவின் முக்கிய உணவு மூங்கில் தழைகள்.

கூடு கட்டி வசிக்கத் தெரியாத பறவை பெங்குவின்.

-ஏ.மூர்த்தி

ரயில் தண்டவாளங்கள் ஒன்றுபோல் ஒன்று இருக்கும் என்று நினைக்காதீர்கள். இடத்துக்குத் தக்கவாறு வேறு வேறான தண்டவாளங்களைப் போடுகிறார்கள். வனப் பகுதிகளில் ஒருவிதமான தண்டவாளங்களையும், மற்ற இடங்களுக்கு வேறு மாதிரியான தண்டவாளங்களையும் போடுகின்றனர். வனப் பகுதியில் போடப்படும் தண்டவாளங்களுக்கு 'கர்ஜிக்கும் தண்டவாளம்' (ரோரிங் ரெயில்ஸ்) என்று பெயர். வனவிலங்குகள் பயந்து ஓடும் வகையில் இந்தத் தண்டவாளத்தில் ஒருவிதமான சத்தம் வரும்.

-மா.சந்திரசேகர்

திருவனந்தபுரம் உயர்நீதிமன்றத்தில் சில ஆண்டுகள் வழக்குரைஞராகப் பணியாற்றியவர் வையாபுரிப் பிள்ளை.

நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கனார் முதன்முதலில் வரைந்த ஓவியம் சுவாமி இராமகிருஷ்ண பரமஹ்மசரின் உருவமாகும்.

'உங்களது சிறந்த கார்ட்டூன் எது?' என்று ஆர்.கே.லட்சுமணனிடம் கேட்டபோது அவர், 'அதை இன்னும் வரையவில்லை'' என்றார்.

'1942' என்ற தலைப்பில் ஒரு நாவலை எழுதியவர் கு.ராஜவேலு. 'இரு நகரங்களின் கதை' என்ற புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்த '1942' நாவலை எழுதினார்.

-த.சீ.பாலு

வினா-விடை என்ற இன்டர்வியூவை 'நேர்காணல்' என்று தூயத் தமிழாக்கம் செய்து அறிமுகப்படுத்தியவர் வடலூர் ராமலிங்கம் அடிகள். முதல் நேர்காணல் என்பது காசி பண்டாரத்துக்கும் கிறிஸ்துவ பாதிரியார் ஒருவருக்கும் 1851-இல் நடைபெற்ற உரையாடல்.

நாக்கில் நான்கு வகையான சுவை மொட்டுகள் உள்ளன. நடுப்பகுதியில் சுவை அரும்புகள் காணப்படுவதில்லை. முன்நுனிப் பகுதி உப்பு, இனிப்புச் சுவைகளை அறிய உதவுகிறது. மனிதனின் நாக்கில் சுமார் 3 ஆயிரம் சுவை அரும்புகள் உள்ளன. பசுவின் நாக்கில் 3,500 சுவை அரும்புகளும், மானின் நாக்கின் சுமார் 50 ஆயிரம் சுவை அரும்புகளும் உள்ளன.

-நெ.இராமகிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.