எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கம்பரும் கண்ணதாசனும்...!

சென்னை கடற்கரையில் நிறுவப்பட்ட காமராஜர் சிலையின் பீடத்தில் பொறிக்க கம்பரின் கவிதை ஒன்றை எழுதித் தருமாறு

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:23 pm

தினமணி

சென்னை கடற்கரையில் நிறுவப்பட்ட காமராஜர் சிலையின் பீடத்தில் பொறிக்க கம்பரின் கவிதை ஒன்றை எழுதித் தருமாறு கண்ணதாசனிடம் சிலை அமைப்புக் குழுவினர் கேட்டனர். அப்போது, அவர்கள் கண்ணதாசனிடமும் கவிதை ஒன்றை கேட்டனர். இவை இரண்டும் இப்போதும் அந்தப் பீடத்தில் அழியாத நிலையில் உள்ளன.
கம்பரின் கவிதை:
''நந்தா விளக்கணையா நாயகனே! நா நிலத்தார்
நந்தாய் தனி அறத்தின் தாயே! தயாநிலையே!
எந்தாய் இகல் வேந்தர்ஏறே!  இறந்தனையே!
அந்தோ! இனி வாய்மைக்கு ஆர்உளரே மற்றுலகில்!''
கண்ணதாசன் கவிதை:
''வாரா விடுதலையை வரவழைத்தாய்; வளரறிவில்
தேரா இளைஞர் நலம் தேர்ந்தாய்; எஞ் ஞான்றும்
ஊரார் நலம் காக்க உடல் நலத்தைத் தானிழந்தாய்
சீராகும் தலைவா! நின் திருமேனி தொழுகின்றோம்!
- தங்க. சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.