திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இரண்டிலும் பகிரலாம்!

உலகம் நாளுக்கு நாள் மாறிக் கொண்டே வருவதற்கு ஏற்ப, வாட்ஸ் ஆப்பும் தனது வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு புதிய சேவைகளை அவ்வப்போது அளித்துக் கொண்டே வருகிறது. ஃபேஸ் புக் (முகநூல்) நிறுவனத்தின் நான்கு

News image
Updated On :1 அக்டோபர் 2019, 7:14 am

உலகம் நாளுக்கு நாள் மாறிக் கொண்டே வருவதற்கு ஏற்ப, வாட்ஸ் ஆப்பும் தனது வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு புதிய சேவைகளை அவ்வப்போது அளித்துக் கொண்டே வருகிறது. ஃபேஸ் புக் (முகநூல்) நிறுவனத்தின் நான்கு சமூகவலைதள ஊடகங்களான வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், மெசேஞ்சர், ஃபேஸ் புக் ஆகிய  நான்கையும் ஒருங்கிணைக்கும் பணியில் அந்த நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

அதன் முதல்கட்டமாக  வாட்ஸ் ஆப்-இல் ஒருவர் பதிவேற்றம் செய்யும் "ஸ்டேடஸ்ûஸ' அப்படியே ஃபேஸ் புக்கில் பகிர்ந்து விடலாம். இந்த புதிய சேவையை வாட்ஸ் ஆப் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, ஒருவர் தனது வாட்ஸ் ஆப் -இல்  இருந்து பகிரும் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவை 24 மணி நேரத்தில் தானாக மறைந்துவிடும்.

இதற்காக வாட்ஸ் ஆப் ஸ்டேடஸில் கிளிக் செய்த பின்னர், அதன் வலது ஓரமாக இருக்கும் மூன்று புள்ளிகளில் "ஷேர் டூ ஃபேஸ் புக்' என்பதை கிளிக் செய்தவுடன் ஃபேஸ் புக் உள்ளே நுழைவதற்கு அனுமதி கேட்கும். பின்னர் ஃபேஸ் புக்கிற்குள் சென்றவுடன் உங்கள் வாட்ஸ் ஆப்பின் ஸ்டேடஸ் பகிரப்படும். இதன் மூலம் ஒருவர் தனது ஸ்டேடஸ்ûஸ வாட்ஸ் ஆப், ஃபேஸ் புக் என தனித்தனியாகப் பதிவிட வேண்டிய அவசியமில்லை. 

இதேபோன்று, கைவிரல் ரேகை மூலம் வாட்ஸ் ஆப்பிற்குள் நுழையும் புதிய சேவையையும் அந்த நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயன்பாட்டாளர்களின் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் புதிய வசதியை அந்த நிறுவனம் அளித்துள்ளது. இதேபோன்று தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க, ஒரே தகவல் வாட்ஸ் ஆப்பில் பலமுறை பகிரப்பட்டிருந்தால், அந்தத் தகவலை மற்றொருவர் பகிரும்போது, "இந்தத் தகவல் பல முறை பகிரப்பட்டுள்ளது' என்ற எச்சரிக்கை தகவல் வெளியாகும்.

மேலும், ஒருவரின் வாட்ஸ் ஆப்பிற்கு வரும் பல ஒலிப்பதிவுகளை தொடர்ந்து கேட்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பு ஒவ்வொரு ஒலிப்பதிவை ஒவ்வொரு முறையும் தனித்தனியாக பிளே செய்து கேட்க வேண்டியிருந்தது. இதுபோன்ற புதிய சேவைகளின் மூலம் பழைய பயன்பாட்டாளர்களை தக்க வைக்கவும், புதிய பயன்பாட்டாளர்களைக் கவர்ந்து இழுக்கவும் ஃபேஸ் புக் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.