திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வேவு பார்க்கும் வைரஸ்!

செல்போன்களில் இணைய பயன்பாடு இல்லாதபோது, குறுஞ்செய்திகளை அனுப்ப எஸ்எம்எஸ்ஸை மட்டும்  பயன்பாட்டாளர்கள் நம்பி இருந்தனர். பின்னர் செல்லிடப்பேசியில் இணையவழி தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப்

News image
Updated On :12 நவம்பர் 2019, 5:38 am

செல்போன்களில் இணைய பயன்பாடு இல்லாதபோது, குறுஞ்செய்திகளை அனுப்ப எஸ்எம்எஸ்ஸை மட்டும் பயன்பாட்டாளர்கள் நம்பி இருந்தனர். பின்னர் செல்லிடப்பேசியில் இணையவழி தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப் வந்ததில் இருந்து பல்வேறு சேவைகளை அறிமுகம் செய்து மக்களைக் கவர்ந்துவிட்டது. ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய பிறகு உலகம் முழுவதும் வாட்ஸ் அப்புக்கு வாடிக்கையாளர்கள் குவியத் தொடங்கினர்.

வாட்ஸ் அப்பில் பகிரப்படும் தகவல்கள் பாதுகாப்பானவை அல்ல என்பது தெரிந்திருந்தும், முக்கிய அரசுத் துறை தகவல்களை அதிகாரிகள் பகிர்ந்து வந்தனர். அதிலும், தற்போது இந்தியா உள்பட உலகம் முழுவதும் 1,400 முக்கியப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களின் வாட்ஸ் அப் தகவல்கள் வேவு பார்க்கப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் "பெகாசஸ்' ( Pegasus) எனும் வேவு பார்க்கும் வைரஸை உருவாக்கியது. பயங்கரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க பல்வேறு நாடுகளின் பாதுகாப்புத் துறைக்காக இந்த வேவு பார்க்கும் வைரஸை விற்பனை செய்து வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. எனினும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த வைரஸை பயன்பாட்டாளருக்கே தெரியாமல் வெறும் வீடியோ கால், சாதாரண எஸ்எம்எஸ் மூலம் ஸ்மார்ட்போனில் புகுத்திவிடலாம். அப்படி இந்த வைரஸை ஸ்மார்ட் போனில் புகுத்திவிட்டால் பயன்படுத்துபவருக்குத் தெரியாமலேயே போட்டோ, வீடியோ, தொலைபேசி எண்கள், இ-மெயில்கள், தொலைபேசி உரையாடல்கள், பகிரப்பட்ட தகவல்கள் என அனைத்து விவரங்களையும் எடுத்துக் கொள்ள முடியும். நமது ஸ்மார்ட்போனில் இந்த வேவு பார்க்கும் வைரஸ் உள்ளதைக் கண்டறியும் தொழில்நுட்பம் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை.

எப்படி நமக்குத் தெரியாமல் இந்த "பெகாசஸ்' புகுத்தப்படுகிறதோ, அதேபோல் அதை நமக்கு தெரியாமலேயே இந்த வைரஸை நமது செல்போனிலிருந்து நீக்கிவிடலாம். "பெகாசஸ்' வேவு பார்க்கும் வைரஸில் இருந்து தப்பிக்க வேறு ஸ்மார்ட்போனுக்கு மாறுவதுதான் ஒரே வழி என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.