திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ரோபோ செய்தி வாசிப்பாளர்!

தொழில்நுட்ப வளர்ச்சியால், இயற்கைக்கும் செயற்கைக்கும் இடையேயான வித்தியாசம் குறைந்து வருகிறது. மனிதனின் வேலைப் பளுவைக் குறைக்க ரோபோக்கள் உருவாக்கப்பட்டன. 

News image
Updated On :19 நவம்பர் 2018, 6:30 pm

தொழில்நுட்ப வளர்ச்சியால், இயற்கைக்கும் செயற்கைக்கும் இடையேயான வித்தியாசம் குறைந்து வருகிறது. மனிதனின் வேலைப் பளுவைக் குறைக்க ரோபோக்கள் உருவாக்கப்பட்டன. 

அந்த ரோபோக்களில் செயற்கை நுண்ணறிவை (ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் - ஏ.ஐ.) பொருத்தி நிலைமைக்கு ஏற்ப தானாக செயல்பட வைத்து வருகின்றனர் விஞ்ஞானிகள். 

இந்த ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சீனாவில் செயற்கையாக செய்தி வாசிப்பாளரை உலகில் முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது அந்நாட்டு அரசு தொலைக்காட்சியான ஜின்ஹுவா. இந்த தொழில்நுட்பத்தை அந்நாட்டின்  இணையதள நிறுவனமான சோகா உருவாக்கிஉள்ளது.

செய்தி தொலைக்காட்சி திரையில் பார்ப்பதற்கு ஆண் செய்தி வாசிப்பாளரைப்போல் உடை அணிந்து இருக்கும் இவருக்கு ஜாங் ஜோ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கணினியில் பதிவிடப்படும் செய்தியை அப்படியே மனிதக் குரலில் பேசும் ஜாங் ஜோ, செய்திக்கு ஏற்ப தனது முகபாவங்களை மாற்றியும், புருவங்களை அசைத்தும் வாசிக்கிறார்.

மற்றொரு செய்தி வாசிப்பாளரின் குரலையும், முக அசைவையும் ஜாங் ஜோக்கு அளித்திருக்கிறார்கள். ஆங்கிலம், சீன என இரு மொழிகளில் செயற்கையான செய்தி வாசிப்பாளர்கள் பேசுகின்றனர். சீன மொழி செய்தி வாசிப்பாளருக்கு கிவ் ஹோ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த செயற்கை செய்தி வாசிப்பாளர் தொழில்நுட்பம் வெறும் தொலைக்காட்சிகளுக்கு மட்டுமில்லை என்று கூறும் சோகா நிறுவனம், வரும் நாள்களில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் பெற்றோர்களாக இவர்களை உருவாக்குவோம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த செயற்கை செய்திவாசிப்பாளர்கள் 24 மணி நேரமும் களைப்படையாமல் பணியாற்றுவார்கள் என்று கூறும் ஜின்ஹுவா தொலைக்காட்சி, இதனால் தங்கள் நிறுவனத்துக்கு செலவு குறையும் என்கிறது. ஜாங் ஜோ, கிவ் ஹோ இருவரையும் சமூக வலைத்தளம், இணையதளம் ஆகியவற்றில் இடைவிடாமல் செய்தி வாசிக்கவும் இந்த தொலைக்காட்சி பயன்படுத்தி வருகிறது. பிழைஇல்லாமல் வாசிப்பதிலும், பிரேக்கிங் நியூஸ்களை உடனடியாக தெரியப்படுத்துவதிலும் இவர்கள் வல்லமை படைத்து வருவதாக ஒருபுறம் பாராட்டுகள் குவிந்தாலும், மனிதர்களின் நுணுக்கமான அசைவுகள் இல்லாத காரணத்தால், இந்த செயற்கையான செய்திவாசிப்பாளர்களை தொடர்ந்து பார்க்க முடியவில்லை என்றும் பார்வையாளர்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.