திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மடிக்கும் ஸ்மார்ட்போன்!

மக்கள் பயன்பாட்டுக்கு கணினி வந்த பிறகு, எப்படி மடிக் கணினியாக மாற்றம் கண்டதோ, அதேபோல் ஸ்மார்ட்போனும் தற்போது மடிக்கும் ஸ்மார்ட்போன் ஆகிவிட்டது.

News image
Updated On :13 நவம்பர் 2018, 4:30 am

மக்கள் பயன்பாட்டுக்கு கணினி வந்த பிறகு, எப்படி மடிக் கணினியாக மாற்றம் கண்டதோ, அதேபோல் ஸ்மார்ட்போனும் தற்போது மடிக்கும் ஸ்மார்ட்போன் ஆகிவிட்டது.

ஆம், உலகின் முதல் மடிக்கும் ஸ்மார்ட்போன் சந்தைக்கு வந்துள்ளது. பல ஆண்டுகளாக இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக கூறும் சாம்சங், எல்ஜி போன்ற முன்னணி நிறுவனங்கள் இதை உருவாக்கவில்லை.

மாறாக, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ரோயோலி என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் "ஃபிளக்ஸிபாய்' எனும் மடிக்கும் ஸ்மார்ட்போனை உருவாக்கி சந்தைப்படுத்தி சாதனை படைத்துள்ளது.  

மடிப்பதற்கு முன்பு 7.8 அங்குலமாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன், மடித்த பின்பு மூன்று திரைகளாக மாறுகிறது. அதாவது முன்பும், பின்பும் இரு திரைகளாகவும், அதற்கு நடுவே உள்ள பகுதி போன் திரையாகிறது.

வீடியோ பிளே ஆகிக் கொண்டிருக்கும்போது, தொலைபேசி அழைப்பு, இ-மெயில் வந்தாலும், வீடியோவுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் அதை மூன்றாவது திரையில் வைத்து படித்துவிடலாம். மடித்துவிட்ட ஸ்மார்ட்போனில் எந்த ஒரு பகுதியில் இருந்தும் இயக்கும் வசதி இதில் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய மடி ஸ்மார்ட்போன் உறுதியானது என்று கூறும் "ஃபிளக்ஸிபாய்' நிறுவனம், இதை உறுதி செய்ய சுமார் 2 லட்சம் முறை மடித்து சோதனை நடத்தியுள்ளதாகவும் கூறுகிறது. இதில் செல்ஃபி கேமரா 20 மெகா பிக்ஸலாகவும், பின்புறம் உள்ள கேமரா 16 மெகா பிக்ஸலாகவும் உள்ளது. சீனா சந்தையில் இந்த மடி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 128 ஜி.பி. கொண்ட மடி ஸ்மார்ட்போன் ரூ. 1.15 லட்சத்துக்கும், 256 ஜி.பி. கொண்ட மடி ஸ்மார்ட்போன் ரூ. 1.29 லட்சத்துக்கும் கிடைக்கிறது. இதனை ஆன்லைனில் பதிவு செய்தும் பெறலாம். 

இந்த புதிய தொழில்நுட்பம் எந்தவித பாதிப்புமின்றி,  வெற்றி பெற்றால், ஸ்மார்ட்போன் விரும்பிகளுக்கு இந்த மடி ஸ்மார்ட்போன் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதில் மாற்றமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.