திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பேட்டரியைச்  சேமிக்கும்  செயலி!

வாரந்தோறும் சந்தைகளில் புதிய ஸ்மார்ட்போன்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆன்ட்ராய்ட், ஐஓஎஸ் ஆப்களும் ஆயிரக்கணக்கில் அதிகரித்து கொண்டே செல்கின்றன.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2018, 1:32 pm


வாரந்தோறும் சந்தைகளில் புதிய ஸ்மார்ட்போன்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆன்ட்ராய்ட், ஐஓஎஸ் ஆப்களும் ஆயிரக்கணக்கில் அதிகரித்து கொண்டே செல்கின்றன. ஆனால், இவற்றை எல்லாம் இயக்கும் பேட்டரிகளின் சேமிப்பு சக்தி, இந்த அதிவேக வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லை. முடிவில், எத்தனை ஆயிரம் கொடுத்து வாங்கிய ஸ்மார்ட் போனாக இருந்தாலும் பேட்டரி சார்ஜ் தீர்ந்து முடங்கித்தான் போய்விடுகிறது.

மனிதர்களுக்கு மூன்று வேளை உணவைப்போல், ஸ்மார்ட் போன்களின் பேட்டரிகளை ஒருநாளில்  மூன்று தடவைக்கும் மேலாக சார்ஜ் செய்ய வேண்டிய நிலைக்கு பயன்பாட்டாளர்கள் தள்ளப்படுகிறார்கள். பேட்டரி பயன்பாட்டைக் குறைக்க திரையின் வெளிச்சத்தைக் குறைத்தல், இன்டர்நெட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தல் ஆகியவற்றை வழக்கமாக பயன்பாட்டாளர்கள் கடைப்பிடிக்கின்றனர். இதைக் கட்டுப்படுத்த பல்வேறு ஆப்கள் இருந்தும், எதிர்பார்த்த அளவில் பயன் கிடைப்பதில்லை.

இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய செயலியை (ஆப்) கண்டுபிடித்துள்ளனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானியும் இடம்பெற்றுள்ளார். இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷிரசாகர் நாயக் கூறியதாவது:

""இரவு முழுவதும் 100 சதவீதம் சார்ஜ் செய்துவிட்டு, வெளியே சென்று ஸ்மார்ட்போனை பகலில் பயன்படுத்தினால் பேட்டரி வேகமாக குறைந்துவிடுகிறது. இதற்கு தேவையில்லாத ஆப்கள் இயங்குவதும் ஒரு காரணம். மீண்டும் சார்ஜ் செய்து பயன்படுத்துவதால், ஸ்மார்ட்போன் சூடாகிவிடுகிறது. இதனால் மூன்று ஆண்டுகாலம் ஆயுள் உள்ள பேட்டரியை  2 ஆண்டுகளில் மாற்ற வேண்டியதாகிறது.

இதைத் தடுக்க புதிய செயலி ஒன்றை உருவாக்கி, 200 ஸ்மார்ட்போன்களில் சோதனை செய்து  பார்த்தோம்.  சோதனையின்போது,  அந்த போன்களில் ஏராளமான ஆப்கள் செயல்பாட்டில் வைக்கப்பட்டன. ஆனாலும் இந்த புதிய செயலியின் மூலம் பேட்டரி திறன் 10 முதல் 25 சதவீதம் வரை சேமிப்பில் இருந்தது. இதை வைத்து நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக ஸ்மார்ட் போனை எந்தவித இடையூறும் இல்லாமல் இயக்கலாம். இந்த புதிய செயலியைப் பயன்படுத்துவதன் மூலம் பயன்படுத்தாத செயலிகளின் பக்கத்தின் வெளிச்சம் தானாக குறைந்துவிடும். இந்தச் செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.