எழும்பூர் தொகுதி மக்கள் க்யூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து 'நம்ம எக்மோர்' ஆஃப்பில் இணைந்து தமிழ்நாடு அரசு திட்டங்களை அறியலாம். எம்எல்ஏ ஐ.பரந்தாமனை கைப்பேசியின் வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம். அவரின் அன்றாடப் பணிகள், பங்கேற்கும் நிகழ்ச்சிகள், பேட்டிகள், சட்டப்பேரவையில் பேசிய பேச்சுகள், அவர் ஆற்றிய சாதனைகள் போன்றவற்றை அறியலாம்.
சென்னையில் தொழிலாளர்கள் நிறைந்த எழும்பூர் தொகுதியில் வீடுகள்தோறும் க்யூ.ஆர். கோடுகள் ஓட்டப்பட்டுள்ளன.
'இது எப்படி சாத்தியமாயிற்று' என்பது குறித்து அவரிடம் பேசியபோது:
'எழும்பூர் சட்டப் பேரவைத் தொகுதி மக்களுக்குத் தேவையான உதவிகளை, நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றியிருக்கிறேன். அவர்கள் விரும்பும் இடத்திலேயே நியாய விலைக்கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. பூபதி நகர் உள்ளிட்ட பல இடங்களில் அரசு நிலங்களில் வசிப்போருக்கு பட்டாக்கள் பெற்றுத் தரப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று அனைத்து மக்களையும் சந்தித்துப் பேச நினைக்கிறேன். அதற்காக இணையத்தை நாடியிருக்கிறேன்.
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்றடைவதை உறுதி செய்யவும், தகுதியிருந்து அரசு நலத் திட்ட உதவிகளைப் பெற முடியாமல் இருப்பவர்களின் விவரங்களைச் சேகரித்து அவர்களுக்கு உதவிகளைப் பெற்றுத் தரவும், மக்களின் குறைகளைக் கேட்டறியவும் வீடு வீடாக சென்று நானும், ஐம்பதுக்கும் மேற்பட்ட சமூகச் சேவையாளர்களும் தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டுள்ளோம். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்தும் நலத்திட்ட உதவிகள் அடங்கிய கையேடுகளை வீடுகள்தோறும் வழங்குகிறோம்.
அரசு நலத் திட்ட உதவிகளுக்காகவும், என்னை சந்திக்க விரும்புவோர் எளிதில் சந்திக்கும் வகையில் உருவானதுதான் 'க்யூ.ஆர்.கோடு' முறை. இந்த க்யூ.ஆர். கோடை கைப்பேசியில் ஸ்கேன் செய்து, 'நம்ப எக்மோர்' ஆஃப்பை பின்தொடரலாம். அதில், கைப்பேசி எண்ணை உள்ளீடு செய்தவுடன், பெயர், முகவரி போன்ற சில தகவல்கள் கேட்கப்படும். பதிவு செய்தவுடன், என்னை எளிதில் தொடர்பு கொள்ள வாய்ப்பு உருவாக்கலாம். அரசு நலத் திட்ட உதவிகள், எனது அன்றாட நிகழ்வுகளை அறியலாம்.
2025 பிப். 23இல் இந்த 'க்யூ.ஆர். கோடு ஆஃப்' முறையை உருவாக்கினேன். இரு வாரங்களில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளில் க்யூ.ஆர். கோடு ஒட்டப்பட்டுள்ளது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆஃப்பில் இணைந்துவிட்டனர். தொடர்ந்து தொகுதி முழுக்க விடுபட்ட வீடுகளில் ஓட்டும் பணி நடைபெறுகிறது' என்கிறார் பரந்தாமன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 518 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா்கள் வழங்கினா்

171 பயனாளிகளுக்கு ரூ. 37.37 லட்சத்தில் நலத் திட்ட உதவி: அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ் வழங்கினார்!

உதகையில் 50 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் எஸ்.கமலி வழங்கினாா்

நாமக்கல்லில் 595 பயனாளிகளுக்கு ரூ. 11.81 கோடியில் நலத் திட்ட உதவி! - அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்செல்வன் வழங்கினாா்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



