இந்தியாவில் சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதை அறிந்த நாக்பூரைச் சேர்ந்த அசோக் திவானி, அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் கூறியது:
'2018-இல் 'ராயல் சொசைட்டி பாஃர் தி ப்ரொடெக்சன் ஆஃப் பேர்ட்' வெளியிட்ட அறிக்கையில், 'இந்தியாவில் சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை 60 % குறைந்துவிட்டன. சில பகுதிகளில் இந்தக் குறைபாடு கடுமையாக உள்ளது. குறிப்பாக, ஆந்திரத்தில் 80%, கேரளா, குஜராத், ராஜஸ்தானில் 20% குறைந்து விட்டன‘ என குறிப்பிட்டிருந்தது.
வங்கிப் பணியில் இருந்து 2012-இல் ஓய்வு பெற்றவுடன் நான் நூலகங்களுக்கு சென்று சிட்டுக் குருவி குறித்த தகவல்களைச் சேகரித்தேன். 2003-இல் திருவனந்தபுரத்தில் சிட்டுக் குருவிகள் முற்றிலுமாக ஒழிந்து விட்டன. 2013 முதல் பல இடங்களில் சிட்டுக் குருவியே இல்லை. லக்னோவிலும் நிலைமை ரொம்ப மோசம் என்று பல தகவல்களை அறிந்தேன்.
சிட்டுக் குருவிகளின் குறைவுக்கு நாம் தற்போது கட்டும் வீடுகளும் காரணம். அடுத்து சுற்றுச்சூழல் சத்தம், மாசான காற்று, வயல்களில் ரசாயன உரங்கள் போன்றவைதான்.
இவற்றுக்கு இருப்பிடமாக கூடுகளை கட்டுவது எனமுடிவு செய்தேன். எனது வீட்டின் மேஜையில் கூடு செய்யத் தேவைப்படும் பசை, குச்சிகள் 'பென்சில்கள்' ஒரு ரூலர்,கத்திரிக்கோல், காகித கட்டர்கள் இடம் பிடித்தன. இரண்டு நாள்களில் ஒரு ஜோடி வந்து இலைகளை வைத்தன. தொடர்ந்து கூடு கட்ட ஆரம்பித்தன.
எனது குருவி வீடு 14*18 சென்டி மீட்டர் என்ற அளவில் பெரியதாகியுள்ளது. முதலில் இலவசமாய் கொடுத்தேன். ஒரு நண்பர் அதனை வாங்கிப் போய் தன் வீட்டு ஷோகேஸில் வைத்து விட்டார். அதனால், ஒரு கூடு 40 ரூபாய்க்கு விற்கிறேன்.
ரண்டு மாடி, மூன்று மாடி கூடுகளும் உண்டு. இந்த பெட்டிகள் ஏழு முதல் எட்டு ஆண்டுகள் வரை பயன்படும்' என்கிறார் அசோக் திவானி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!

அரசியல் பங்கேற்பை எளிதாக்கும் சமூக ஊடகங்கள்!
உயர்ந்த நிலைக்குச் சென்றாலும்...

தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


