தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சிரி... சிரி...

News image
Updated On :27 ஏப்ரல் 2024, 6:30 pm

'என்னம்மா. ஒரு வாரமா சாப்பாடு

சரியில்லை.'

'அவருக்கும் எனக்கும் சண்டை. அதான் ஓட்டலில் வாங்குறோம்..'

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

'நாளைக்கு என்னைப் பெத்தவங்க வர்றாங்க?'

'அதனால் என்னங்க?'

'அவங்க எதிரில் என்னை சமைக்கச் சொல்லாதே...'

-ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.

'ஏன்டி.. வேலைக்காரியை திடீர்னு நிறுத்திட்டே...'

'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் நம்ப சொத்து விவகாரத்தைக் கேட்டிருக்கா.. அதாங்க..'

-ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு.

'என்னடி... ஸ்லோகன் போட்டியில் பரிசு வந்த வாஷிங் மெஷினை ஏன் வேண்டாமுன்னு சொல்லிட்டே...'

'துவைக்க நீங்க இருக்கீங்க.. அதான் வேற வாங்கிக்கிறேங்க..'

-ப,.சோமசுந்தரம், கோவிலம்பாக்கம்.

'அண்ணா... தோசை மாவு வாங்கப் போனா எங்க வீட்டுக்காரரை ஒரு வாரமா காணலை..'

'என்னம்மா பண்ணே..'

'உப்புமா, பூரின்னு சாப்பிட்டு சமாளிக்கிறேன்...'

-நெ.இராமகிருஷ்ணன், சென்னை-7.

'நீ ஏன் ஒரு கையில் மட்டும் வளையல் போட்டுக்கிறே..'

'எனக்கு செகன்ட் ஹேண்ட் வளையல் பிடிக்காதே..'



'இது எங்க பாட்டி காலத்துக்கு குக்கர்..'

'அப்ப நல்ல ஆவி வந்த குக்கருன்னு சொல்லு...'

-வி.சாரதி டேச்சு, சென்னை-5.

'ஏன்டா முதல் மாச சம்பளத்தை அப்பா கையில் கொடுக்காமே டேபிள் மேல வைக்கிறே...'

'இல்லம்மா.. அவருகிட்டே வாங்கின கை.

கொடுக்கக் கூடாதுல்ல.. அதான்...'

-ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி.

'பள்ளிக்கூடத்துக்கு எதுக்கு சீப்பு கொண்டு போறே...'

'கேள்வி கேட்கும்போது தலையை சொறிய

கூடாதுன்னு மிஸ் சொன்னாங்கம்மா.. அதான்..'

-ச.அரசமதி, தேனி.

'கல்யாணத்துக்கு முந்தி யாரையாவது காதலிச்சியான்னா கேட்டா ஏன்டி பதிலே சொல்லலை..'

'இல்லைங்க... உண்மையைச் சொன்னா உங்க மனசு சங்கடப்படும். பொய் சொன்னா என் மனசு உறுத்தும்.. அதாங்க..'



'பொண்ணு கிளி மாதிரி இருந்திச்சேன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...'

'அதை ஏன் வருத்தமா சொல்றே...'

'கல்யாணமாகி வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையா.. எல்லா சாவிகளையும் வாங்கி இடுப்புல வச்சுக்கிட்டா...?'



'எல்லாத்துக்கும் பெண்டாட்டி பேச்சைக் கேட்டா வாழ்க்கையில் முன்னேற முடியாதுப்பா...?'

'நீங்க முன்னேற முடியாததுக்கும் அதான் காரணமாப்பா...?'

-வி.ரேவதி, தஞ்சாவூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.