எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

திரைக் கதிர்

விஜய்  லோகேஷ் கனகராஜ் கூட்டணி, "லியோ' வுக்கான காஷ்மீர் ஷெட்யூலை முடித்து, சென்னையில் முகாமிட்டிருக்கிறது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:54 pm

தினமணி

விஜய்  லோகேஷ் கனகராஜ் கூட்டணி, "லியோ' வுக்கான காஷ்மீர் ஷெட்யூலை முடித்து, சென்னையில் முகாமிட்டிருக்கிறது. ஸ்டூடியோ ஒன்றில் வீடு செட் தயாராகி வருகிறது. விரைவில் விஜய், த்ரிஷா இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் நடக்கவிருக்கிறது. சென்னை செட்யூலுக்குப் பிறகு இந்த டீம் ஹைதராபாத் பறக்கலாம்   என்கின்றனர்.

----------------------------

பாதியில் நின்ற "வணங்கான்' படத்தை மீண்டும் தொடங்கி விட்டார் இயக்குநர் பாலா. ஏற்கெனவே சூர்யாவின் 2டி நிறுவனம் படத்தைத் தயாரித்திருந்த நிலையில், அதற்குச் செலவான தொகையை கொடுத்து விட்டு ஷூட்டிங்கைத் தொடங்கச் சொல்லி பாலாவிடம் பஞ்சாயத்து பேசியிருந்தார்கள். ஆனால், பண விவகாரத்தைச் சட்டை செய்யாமல், கன்னியாகுமரிக்குப் போய் ஷூட்டிங்கைத் தொடங்கிவிட்டார் பாலா. "கவுன்சிலில் புகார் பண்ணலாமா?' என நெருக்கமானவர்கள் கேட்க, "வேண்டாம்' எனச் சொல்லிவிட்டாராம் சூர்யா.

----------------------------

இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி, மகிழ் திருமேனி ஆகியோரின் படங்களில் நடிக்க ரொம்பவே ஆசைப்படுகிறாராம் ஆர்யா. இந்த இருவரும் ஆர்யாவை வைத்து ஏற்கெனவே படமெடுத்தவர்கள். ஆனாலும், இருவருமே பிஸியான ஓட்டத்தில் இருப்பதால், அதற்கான வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அதனால், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, "நவம்பர் ஸ்டோரி' இந்திரா சுப்ரமணியன் இருவரிடமும் கதை கேட்டு அடுத்த லைன்அப்புக்கு வியூகம் வகுத்துவருகிறாராம் ஆர்யா.

----------------------------

தமிழ், மலையாளம், கன்னடம்,  ஹிந்தி எனப் பல மொழிகளில் பிரபல பிண்ணனி இசை பாடகியாக வலம் வருபவர் பாம்பே ஜெயஸ்ரீ. மேலும், கர்நாடக இசை மட்டுமின்றி, சினிமா பாடல்கள் மட்டுமின்றி, இந்துஸ்தானி இசை உட்பட எல்லா ஜானர்களிலும் பாடக்கூடியவர். ற்போது இசைக் கச்சேரிக்காக லண்டனுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த வருடத்தின் "சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் லண்டன் சுற்றுப்பயணத்தில் இருக்கும் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.