மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

பள்ளி வளாகத்தில் ரயில்!

மதுரை  பெரியார் பேருந்து நிலையத்திற்கு அருகில்   தெற்கு ரயில்வே காலனியில்  மதுரை (கல்லூரி) மேல்நிலைப்பள்ளி  செயல்பட்டு வருகிறது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:23 am

பனுஜா

மதுரை  பெரியார் பேருந்து நிலையத்திற்கு அருகில்   தெற்கு ரயில்வே காலனியில்  மதுரை (கல்லூரி) மேல்நிலைப்பள்ளி  செயல்பட்டு வருகிறது. பழமையான  இந்தப் பள்ளியில் புதுமை ஒன்று  சமீபத்தில் அரங்கேறியுள்ளது. அந்தப் புதுமை  மழலையர்களுக்கு  குதூகலம்,  உற்சாகம்  தரும் வகையில்  அமைந்துள்ளது. 

ஆம்... மழலையர் வகுப்பு அறைகள்  ரயில் பெட்டி போன்று  வடிவமைக்கப்பட்டுள்ளன. 

பள்ளியின் அருகில்  உண்மையான ரயில் பாதையும் உள்ளது. அதில் ரயில் வண்டி "கூ.. கூ' என்று ஒலியெழுப்பிக் கொண்டு போகும்... வரும்.  
ரயில்  சத்தம் குழந்தைகளின் காதில் விழுந்ததும் ஆர்வத்தில் சிலர் ரயில் போவதைப் பார்க்க எட்டிப் பார்ப்பார்கள்.

அவர்களின் ஏமாற்றத்தைத் தவிர்க்க  வகுப்பறைகளை ரயில் பெட்டி போல் வடிவமைத்திருக்கிறார்கள். 

ஜன்னல், வாசல் அனைத்தும் ரயில் பெட்டியில் எப்படி இருக்குமோ அப்படியே அமைத்திருக்கிறார்கள்.

ரயில் இன்ஜினையும் வரைந்து வைத்திருக்கிறார்கள்.  ரயில் பெட்டியின் நிறத்தையும்  நீலம், வெளிர் நீலத்தில்  பூசியிருக்கிறார்கள். சட்டென்று பார்த்தால் பள்ளி வளாகத்தில்  ரயில் வண்டி நிற்பது போலத் தோன்றும். 

மழலை வகுப்பில் படிக்கும் குழந்தைகள்  வகுப்பு நேரத்தில்  வெளியே  யாராவது அந்தப் பக்கம் சென்றால், கை அசைத்து "டா டா'  காண்பிக்கிறார்கள்.  இந்த "ரயில் வகுப்பு'  குழந்தைகளுக்குப்   மிகவும் பிடித்திருப்பதால் வீட்டிலிருந்து பள்ளிக்குக் கிளம்ப   யாரும் முரண்டு பிடிப்பதில்லையாம்! 

அதனால் இந்த  "ரயில்' வகுப்பு   மழலைகளின் பெற்றோருக்கும் பிடித்துப் போய்விட்டது. இந்தப் பள்ளியில் இதர  வகுப்புகளில்  சுமார் மூவாயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.