எம்.ஜி.ஆர்., ரஜினி உள்பட பலர் தங்களது படங்களில் சிறுவர்களுக்குத் தேவையான நல்ல விஷயங்களைக் காட்சிகள், பாடல்கள் மூலம் உணர்த்துவதை வழக்கமாகக் கொண்டவர்கள். அந்த வரிசையில் சூர்யாவும் இப்போது சேர்ந்திருக்கிறார். ஆனால் படத்தில் வரும் பாடல்களில் அறிவுரை சொல்லாமல் "நன்கு படிக்க வேண்டும்; பெற்றோர், ஆசிரியர்களை மதிக்க வேண்டும். பென்சிலால் காது குடையக் கூடாது; ஷார்ப்னரில் விரலை விடக்கூடாது; காம்பûஸ வைத்து விளையாடக் கூடாது' போன்ற விஷயங்களை தன் குரலிலேயே பதிவு செய்து அதை டி.வி.டி. வடிவில் தயாரித்திருக்கிறார். அந்த டி.வி.டி.களை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கும் அனுப்பியிருக்கிறார். இலவசமாகவா?