""நாடகம் அரங்கேற்றும்போது எங்களுக்குள் ஆசிரியர், மாணவர்கள் என்ற வேறுபாடே ஏற்படுவதில்லை. நாடகத்தின் சில பாத்திரங்களில் மாணவர்களுடன் இணைந்து நாங்களும் நடிப்பதால், நண்பர்களைப்போலப் பழக முடிகிறது. நாடகத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் முடிவு செய்து, இப்படியிப்படி வரும், இதுபோல்தான் பேச வேண்டும் என்று முடிவு செய்துவிடுகிறோம். வசனம் எழுதி வைத்து மனப்பாடம் செய்வதில்லை. நாடகம் நடைபெறும் இடத்தில் அவரவருக்குரிய வசனத்தை அவரவர் இயல்பாகப் பேசி விடுவர். இதனால் மேடையில் அரங்கேறும் நாடகம்போல் தோன்றாமல், நம்மிடையே தினசரி நடக்கும் சம்பவம்போல் தோன்றுகிறது'' என்று விவரிக்கிறார் விரிவுரையாளர் சுப்ரமணியம்.