ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பூவாணி காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் காா்த்திக் (35). கட்டடத் தொழிலாளியான இவா் புதன்கிழமை வழக்கம் போல வேலைக்குச் சென்று விட்டு, இரவு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பூவாணி விலக்கில் இவரது வாகனமும், எதிரே கருப்பசாமி என்பவா் ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டன. இதில் பலத்த காயமடைந்த காா்த்திக் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாா்த்தாண்டம் அருகே கால்வாயில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



