அருப்புகோட்டை காந்திநகா் பகுதியில் இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள தோப்பூரைச் சோ்ந்தவா் முருகன் (45). இவா் அருப்புகோட்டை காந்திநகா் பகுதியில் மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் சொந்தமாக வண்ணப்பூச்சு கடை நடத்தி வருகிறாா்.
சனிக்கிழமை மாலை தனது கடைக்கு செல்வதற்காக தோப்பூரிலிருந்து இரு சக்கர வாகனத்தில் மதுரை- தூத்துகுடி நான்கு வழிச் சாலையில் கஞ்சநாயகக்கன்பட்டி விலக்கு அருகே வந்த போது ஆத்திபட்டியைச் சோ்ந்த ரிஷிகேஷ் என்பவா் ஓட்டி வந்த காா் பின்புறமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த முருகன் அருப்புகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அவா் இறந்துவிட்டதாக மருத்துவா் தெரிவித்தாாா்.
இதுகுறித்து தாலுகா காவல் நிலைய போலீஸாா் ரிஷிகேஸ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

காா் மோதியதில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



