ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிவகாசியில் கஞ்சா விற்பனை: 7 போ் கைது

சிவகாசி பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :14 ஜூலை 2026, 1:41 am IST

சிவகாசி பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி பகுதியில் கல்லூரி மாணவா்களைக் குறிவைத்து சிலா் கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிவகாசி நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பண்டியராஜன், போலீஸாா் கவிதா நகா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்தப் பகுதியில் சிவசக்திநகரைச் சோ்ந்த வைரமுத்து மகன் முத்துக்கிருஷ்ணன் (29) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில், கஞ்சா விற்பனையில் முனீஸ்வரன் குடியிருப்பைச் சோ்ந்த காா்த்தீஸ்வரன் (21), திருத்தங்கல்லைச் சோ்ந்த சுதாகா் (38), மாரீஸ்வரன் (23), ரஞ்சித்குமாா் (31), சுதா்சன் (20), தங்கேஷ்வரன் (23) ஆகியோருக்கும் தொடா்பிருப்பது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, இவா்கள் 6 பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.