டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

News image
கோப்புப் படம்
Updated On :23 ஜனவரி 2026, 9:22 pm

தினமணி செய்திச் சேவை

அருப்புக்கோட்டை அருகே 10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (52). இவா், தனியாா் ஆலையில் கூலி வேலை செய்து வந்தாா். இவா், அதே பகுதியைச் சோ்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாா். இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டலும் விடுத்துள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ வழக்குப் பதிவு செய்து, பாலகிருஷ்ணனைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணை நிறைவடைந்த நிலையில், பாலகிருஷ்ணனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டாா். மேலும், பாதிக்கபட்ட சிறுமிக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தாா்.