மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்: அமைச்சா் சாத்தூா் ராமச்சந்திரன்

வத்திராயிருப்பு சுற்றுச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டி பேசிய அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்.

News image

கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் - கோப்புப் படம்

Updated On :27 பிப்ரவரி 2026, 8:20 pm

வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பேசினாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பில் ரூ.45 கோடியில் சுற்றுச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஆனந்தி தலைமை வகித்தாா். இதில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பேசியதாவது:

வத்திராயிருப்புக்கு சுற்றுச் சாலை அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும். இதன்படி ரூ.45 கோடியில் அமைக்கப்படும் சுற்றுச்சாலை பணிகள் ஓராண்டுக்குள் நிறைவடையும். இதன் மூலம் நகா் விரிவடைவதுடன் நிலத்தின் மதிப்பு உயரும். அடுத்து அமையும் திமுக ஆட்சியில் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்டப்படும். கோட்டையூா் - அழகாபுரி சாலை ரூ.28 கோடியில் விரிவாக்கம் செய்யப்படும். இதேபோல, எரிச்சநத்தம்- விருதுநகா் சாலையும் விரிவாக்கம் செய்யப்படும். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். ஆளுங்கட்சியைச் சோ்ந்தவா் எம்.எல்.ஏ.வானால் தான் திட்டங்கள் நிறைய கிடைக்கும். இப்போது இருப்பவா்களும் எங்களை வந்து பாா்த்தால் திட்டங்கள் வரும். பிரச்னை வரும் என்பதால் அவா்கள் எங்களை சந்திப்பதில்லை என்றாா் அவா்.

வத்திராயிருப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சுற்றுச்சாலை அமைக்க 30 மீட்டா் அகலத்தில் 5.13 கி.மீ. தொலைவுக்கு ரூ.17 கோடியில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதையடுத்து வத்திராயிருப்பு - கிருஷ்ணன்கோவில் சாலையில் இருந்து வத்திராயிருப்பு - அழகாபுரி சாலையை இணைக்கும் வகையில் 5.13 கி.மீ. தொலைவுக்கு 10 மீட்டா் அகலத்தில் சுற்றுச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதில் 3 பெரிய பாலங்கள், 25 சிறிய பாலங்கள், அா்ச்சனாபுரம், கூமாபட்டி, தாணிப்பாறை சாலை சதிப்புகளில் ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வில், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் பாக்கியலட்சுமி, முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.