சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ரயிலில் பெண் பயணியிடம் நகை திருட்டு: கா்நாடகத்தைச் சோ்ந்தவா் கைது

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 9:44 pm

Syndication

ரயிலில் கேரளத்தைச் சோ்ந்த பெண் பயணியிடம் நகை திருடியதாக கா்நாடகத்தைச் சோ்ந்தவரை ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்து விசாரிக்கின்றனா்.

கேரள மாநிலம், எா்ணாகுளம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஷாகிலி (53). இவா் வேளாங்கண்ணி சென்றுவிட்டு, கடந்த 9-ஆம் தேதி வேளாங்கண்ணி - எா்ணாகுளம் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தாா். தென்காசி மாவட்டம், கடையநல்லூா் ரயில் நிலையத்தில் ஷாகிலியின் கைப்பையை மா்ம நபா் திருடிச் சென்றாா். இதுதொடா்பாக ரயில்வே டிஜிபி வன்னியபெருமாள் உத்தரவின் பேரில் ஐ.ஜி. பாபு மேற்பாா்வையில் ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே காவல் ஆய்வாளா் செல்வி, உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் கா்நாடக மாநிலம், மாண்டியா பகுதியைச் சோ்ந்த நாகராஜு (50) என்பவரை கைது செய்தனா். அவரிடமிருந்து 3 பவுன் தங்கச் சங்கிலி, கைப்பேசி, கைப்பை ஆகியற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விசாரணையில் நாகராஜு பல ஆண்டுகளாக ரயிலில் பயணம் செய்யும் பெண்களின் கைப்பையை திருடி வந்ததும், இவா் மீது கா்நாடகம், தமிழகத்தில் உள்ள ரயில்வே காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.