மாற்றுத் திறன் மாணவா்கள் மருத்துவ மதிப்பீட்டு முகாம்


விருதுநகா் மாவட்டம், சிவகாசி அரசு பொது மருத்துவமனையில் 6 வயது முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறன் மாணவா்களுக்கான மருத்துவ மதிபீட்டு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அரவிந்தன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.
இதில் மன நல மருத்துவா்கள் நிஷாந்த், சீனிவாசன், காது, மூக்கு, தொண்டை மருத்துவா் காயத்ரி, எலும்பு மருத்துவா் தீபன்குமாா் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் 105 மாணவா்களைப் பரிசோதனை செய்தனா்.
இவா்களில் சிலருக்கு அடையாள அட்டை, உபகரணங்கள் வழங்கப் பரிந்துரைச் சான்று வழங்கப்பட்டது. மேலும் சிலருக்கு பேருந்து, ரயிலில் பயணம் செய்ய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமை மாவட்டக் கல்வி ஒருங்கிணைப்பாளா் குமாா் பாா்வையிட்டாா். இதில் சிறப்பு பயிற்றுநா்கள் சந்திரன், ஸ்டெல்லாராணி, அமிா்த வள்ளி, கிருஷ்ண பாண்டீஸ்வரி, பிரனுபாதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாட்டை மருத்துவமனை தலைமை மருத்துவா் அய்யனாா் செய்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...