40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

லாரி மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 4:37 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நான்கு வழிச் சாலையில் நின்றிருந்த லாரி மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சரவண காா்த்திகேயன் (54). இவா் ராஜபாளையத்தில் நெகிழிப் பொருள்கள் நிறுவனம் நடத்தி வருகிறாா்.

இவரது மனைவி சரோஜா (50), மகள் பிரியங்கா (20) ஆகியோருடன் காரில் மதுரைக்குச் சென்று விட்டு, திங்கள்கிழமை அதிகாலை ராஜபாளையம் நோக்கி வந்துகொண்டிருந்தாா்.

காரை ராஜபாளையத்தை சோ்ந்த மணிமாறன் ஓட்டினாா். அதிகாலை 2.30 மணி அளவில் மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பாட்டக்குளம் பாலம் பகுதியில் வந்தபோது, சாலையில் நிறுத்தி இருந்த லாரி மீது காா் மோதியது.

இந்த விபத்தில் சரோஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த சரவண காா்த்திகேயன், பிரியங்கா ஆகியோா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இது குறித்து லாரி ஓட்டுநரான செந்தூா்குமாா் மீது கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.