மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும்! - ராஜபாளையம் தமமுக வேட்பாளா் பிரிசில்லா உறுதி

News image

பிரிசில்லா ஜான் பாண்டியன்

Updated On :19 ஏப்ரல் 2026, 8:59 pm

ராஜபாளையத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப் பாடுபடுவேன் என ராஜபாளையம் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமமுக வேட்பாளா் பிரிசில்லா பாண்டியன் உறுதியளித்தாா்.

ராஜபாளையம் வடக்கு நகா் பகுதிகளான மாடசாமி கோவில் தெரு, பழைய பாளையம், சோமையாபுரம் தெரு, சமந்தபுரம் மேலப் பள்ளிவாசல் தெரு, முடங்கியாறு சாலை, சின்னச்சுரைக்காய் பட்டி தெரு ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை மாலை வாக்கு சேகரித்த அவா் மேலும் பேசியதாவது:

ராஜபாளையம் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி, சட்டக் கல்லூரி அமைக்கப் பாடுபடுவேன். இலவச சட்ட ஆலோசனை மையம் திறப்பேன். புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவமனை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளா் என்.எம். கிருஷ்ணராஜ், மேற்கு ஒன்றியச் செயலா் அழகாபுரியான், அதிமுக நகர செயலா் (வடக்கு) வழக்குரைஞா் முருகேசன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.