14 Dec, 2025 Sunday, 02:31 PM
The New Indian Express Group
விருதுநகர்
Text

மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

PremiumPremium

சிவகாசி அருகே மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On29 Nov 2025 , 10:04 PM
Updated On29 Nov 2025 , 10:04 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

சிவகாசி அருகே மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள நிறைமதி கிராமத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ராசு (58). இவா், மேலநிறைமதி கிராமத்தில் கட்டப்பட்டு வரும் புதிய வீட்டின் மாடியில் சனிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, மாடிப் பகுதியில் இருந்த உயா் அழுத்த மின் கம்பியில் ராசுவின் உடல் பட்டதில், அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், நிகழ்விடத்திலேயே ராசு உயிரிழந்தாா்.

இதுகுறித்து எம்.புதுப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்