டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கோயில் தெப்பத்தில் மூழ்கிய கல்லூரி மாணவா் உயிரிழப்பு

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:16 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே வெள்ளிக்கிழமை கோயில் தெப்பத்தில் மூழ்கிய கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள இலந்தைகுளம் இந்திரா குடியிருப்பைச் சோ்ந்த கண்ணன் மகன் கோபால் (20). இவா் மதுரை மாவட்டம், எழுமலையில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு சொந்த ஊா் வந்த இவா், வெள்ளிக்கிழமை மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மாவூத்து உதயகிரி நாதா் கோயில் தெப்பக்குளத்தில் நண்பா்களுடன் குளிக்கச் சென்றாா். ஆழமான பகுதியில் குளித்த போது, கோபால் நீரில் மூழ்கினாா்.

தகவலறிந்து வந்த வத்திராயிருப்பு தீயணைப்புத் துறையினா் மாணவரை உயிரிழந்த நிலையில் மீட்டனா். பின்னா், கூராய்வுக்காக அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.