டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை எத்தனை முறை எழுதலாம்? வயது வரம்பு என்ன?

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வை எத்தனை முறை எழுதலாம், வயது வரம்பு என்ன என்பது தொடர்பாக...

News image
Updated On :15 பிப்ரவரி 2026, 9:28 am

இணையதளச் செய்திப் பிரிவு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தரப்பில் ஆண்டுதோறும் பல்வேறு பணிகளுக்காக சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது.

அதன் படி, இந்த ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியானது. இந்த ஆண்டில் 933 பணியிடங்கள், இந்தத் தோ்வு மூலம் நிரப்பப்படவுள்ளது. இதில் 33 பணியிடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல்நிலைத் தோ்வு மே மாதம் 24-ஆம் தேதி நடத்தப்படுகிறது.

யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் ஒருவர் எத்தனை முறை தேர்வை எழுதலாம், அதற்கான வயது வரம்பு குறித்து பின்வருமாறு காணலாம்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் தகுதியுள்ள தேர்வர்கள் ஒவ்வொருவரும் 6 முறை இந்தத் தேர்வினை எழுதலாம். இருப்பினும், எஸ்சி/எஸ்டி/ஓபிசி (SC/ST/OBC) பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு (PwBD) தேர்வு எழுதுவதில் வயது வரம்பு தளர்வுகள் உள்ளன.

Story image

வயது வரம்பு தளர்வு விவரம்

பொதுவாக சிவில் சர்வீஸ் தேர்வை எழுதுவதற்கு ஒருவருக்கு குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்சமாக 32 வயது வரை எழுதலாம். இருப்பினும், ஒவ்வொரு பிரிவினருக்கும் வயது வரம்பு தளர்வுகள் உள்ளன.

எஸ்சி/எஸ்டி (SC/ST): வயது வரம்பு முடியும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வெழுதலாம். (32 + 5 = 37 வயது வரை)

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC): 9 முயற்சிகள். (32 + 3 = 35 வயது வரை)

மாற்றுத்திறனாளிகள் (PwBD): GL/EWS/OBC பிரிவினருக்கு 9 முயற்சிகள்; (32 + 10 = 42 வயது வரை)

மாற்றுத்திறனாளிகள் (PwBD): எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினர் வயது வரம்பு முடியும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வெழுதலாம். (32 + 15 = 47 வயது வரை)

summary

Regarding how many times one can appear for the Civil Services Examination conducted by the Central Public Service Commission and what is the age limit...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.