கருவில் தொலைந்த குழந்தை: கே.நடராஜன்


கவிதை ஒன்று எழுத நல்ல
கரு ஒன்று தேடினேன் நான்
சுறு சுறுப்பாக !
விறு விறு என்று எழுதி தள்ளினேன்
பக்கம் பக்கமாக !
ஒரு கரு அல்ல ..ஒரு நூறு
கரு என் கவிதைக்கு போட்டது
அடித்தளம் !
எதுகையும் மோனையும் கோர்த்ததா
கை என் கவிதையில் ? இல்லையே !
என் கவிதை எனக்கே புரியாத
விடுகதை ஆனதே !
தேடித் தேடி கருவை விதைத்தும்
உருவாகவில்லையே ஒரு நல்ல
கவிதை!
கருவிலே தொலைந்த குழந்தை
போல ஆனதே என் கவிதை !
நல்ல கரு ஒன்று தேடுகிறேன்
மீண்டும் நான் ! கருவிலே தொலையாமல்
இந்த புது கவிதை என் மடியில் கொஞ்சி
விளையாட வேண்டும் ஒரு குழந்தை போல !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...