தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மிச்சத்தை மீட்போம்: ஜெ.முகிலினி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:26 pm

கவிதைமணி

அரசியல்வாதிகளிடம் பணத்துக்காக 
ஓட்டினை அடகு வைத்தோம்...

ஆங்கில வழி பள்ளிகளிடம் 
தாய்மொழி தமிழினை அடகு வைத்தோம்...

சொந்த வீடு,சாலை விரிவு காரணங்களுக்காக
மரங்களை வெட்டி மழையினை அடகு வைத்தோம்...

மதுபான கடைகளில் மரியாதையையும் 
உடல் ஆரோகியத்தையும் அடகு வைத்தோம்...

தொழிற்சாலையின் மாசு காற்றில் தூய 
காற்றினை அடகு வைத்தோம்...

பன்னாட்டு நிறுவன வேலைமேல் கொண்ட மோகம் 
காரணமாக விவசாயத்தை அடகு வைத்தோம்...

தேவையற்ற சிலவற்றிற்காக 
தேவையான பலவற்றை அடகு வைக்கிறோம்...

போராடி பெற்ற சுதந்திரத்தை 
"போராடி" , "போராடியே வாழ்ந்துகொண்டிருக்கிறோம் 
விழித்தெழுந்து போராடுவோம்"...!

அடகு வைத்ததையும் , அடகு வைக்க 
எஞ்சியுள்ள  "மிச்சத்தையும் மீட்போம்"

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.