கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

சட்டம்:  லூர்து எஸ் ராஜ்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

சட்டத்தை வகுத்தவர் சரியாய்த்தான் செய்தார் –அதில்
சந்து பொந்தைக் கண்டவனோ   தப்பித்துக் கொண்டான்.
சட்டத்தை வளைத்துக் கொண்டான் அரசியல்வாதி – அதை
சற்றும் அறியா பாமரனோ மாட்டிக்கொண்டான்.

எல்லாரும் சமமென்ற போதிலும் இந்நாட்டில்  - வாழ்
ஏழைக்கு தனிச்சட்டப் பாதுகாப்பு  வேண்டும்
பல்லாண்டு சென்றாலும்  மாற்றமில்லை – கொடும்
பணத்தா ட்சி மாறாமல்  அவர்க்கு   வாழ்வில்லை.

ஓட்டையில்லா சட்டங்கள் வாய்ப்பதில்லை   –  நல்லார்    
ஒழுங்கமைதி உறுதியைக் குலைப்பதில்லை.
சட்டத்தை மதித்திட    மறக்க  வேண்டாம் –  மனச்
சாட்சி எனும் சட்டத்தை    ஏய்க்க  வேண்டாம் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.