சட்டம்: லூர்து எஸ் ராஜ்


சட்டத்தை வகுத்தவர் சரியாய்த்தான் செய்தார் –அதில்
சந்து பொந்தைக் கண்டவனோ தப்பித்துக் கொண்டான்.
சட்டத்தை வளைத்துக் கொண்டான் அரசியல்வாதி – அதை
சற்றும் அறியா பாமரனோ மாட்டிக்கொண்டான்.
எல்லாரும் சமமென்ற போதிலும் இந்நாட்டில் - வாழ்
ஏழைக்கு தனிச்சட்டப் பாதுகாப்பு வேண்டும்
பல்லாண்டு சென்றாலும் மாற்றமில்லை – கொடும்
பணத்தா ட்சி மாறாமல் அவர்க்கு வாழ்வில்லை.
ஓட்டையில்லா சட்டங்கள் வாய்ப்பதில்லை – நல்லார்
ஒழுங்கமைதி உறுதியைக் குலைப்பதில்லை.
சட்டத்தை மதித்திட மறக்க வேண்டாம் – மனச்
சாட்சி எனும் சட்டத்தை ஏய்க்க வேண்டாம் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...