கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

நீதியைத் தேடி:   கவிஞர் மா.உலகநாதன்,

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

எங்கே தேடுவேன்,நீதியை
எங்கே தேடுவேன்;
வாடி வாசலிலா,கடற்கரை 
மணலிலா?
காணாமல் போன ஒன்றைக்
கடுகியே தேடச் செய்கிறீர்!
மனத்துக்கண் மாசு அமர்ந்ததுமே
இனத்துக்கண் நீதி இற்றுப் போகுமே!
மனுச்சோழன் ஆண்ட மண்ணில்,மாய்மாலக்காரர்களால் நீதி மாண்டு போய் நெடுங்காலம் ஆனதே!
நீதிபோதனை, பாடவகுப்பிலிருந்தும்
மனத்தேடல் தொகுப்பிலிருந்தும்
மறைந்து போனதே!
இதில்
எங்கே தேடுவேன்,நீதியை எங்கே தேடுவேன்;
தனியொரு மனிதன்  நீதிமான் என்றால்
சமுதாயமும் கவரிமான் ஆகாதோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.