கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

எனை நனைத்த மழை:  ஸ்டெல்லா தமிழரசி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

துவைத்த தாவணியின்
கடைசி சொட்டு நீரை
வைரமாக பத்திரபடுத்துகிறேன்...

*மாங்கு மாங்கென
அம்மியில் அறைந்த
உளுந்தப்பருப்பு துவையலின்
கூடுதல் சுவையே உன் நெற்றிநீரின்
வியர்வை துளிதான்...

*சொட்ட சொட்ட
நனைந்த கருங்கூந்தலோடு
பால்கனி ஓரத்தில்
படக்கென்ன கூந்தலை அடித்துஓடிவரும்
சிறு தூரல் தான் ஜம் ஜம் ஊற்று எனக்கு ...

*நீ
வாசல் தெளித்த
வாளி தண்ணீரெல்லாம் 
புனிதநீர் தான்...

* நீ நீர் தெளித்த சாரலில்
பூப்பெய்தியது 
பருவ காதல்....

*வெட்க மழையில்
நனைத்துவிட்டு போகிறாய்
உன் ஒற்றை புன்னகையில்
எப்படி துவட்டிக்கொள்ள
முடியும் என்னால்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.