பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

சூரிய தாகம்: ரெத்தின.ஆத்மநாதன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

சூரியனே!
இப் புவியின் நாயகனே!
உனக்குத் தான் ஏன்
இவ்வளவு தாகம்?

ஓ!
அரசியல்வாதிகளும்...
அதிகாரிகளும்...
நீதி...நேர்மை...
மறந்ததால்தான்...
உன் தாகம் 
எல்லை மீறிப் போனதோ?

எங்கள் இதய நாயகனே!
உன் தாகத்திற்கு நீ...
ஏரிகள்...
ஆறுகள்...
குளங்கள்...
குட்டைகள்...
என்று எல்லா நீர்நிலைகளையும்
முழுதாய் உறிஞ்சி விட்டாய்!

பூமியில்  இப்பொழுது...
புல்...பூண்டுகள் முதல்...
ஊர்வன...நடப்பன...
ஓடுவன...பறப்பன...
அத்தனையும் நீருக்கு 
ஆலாய்ப் பறக்கின்றன!

எங்கள்...
அரசியல்வாதிகள்...
அதிகாரிகள் ...
போல் அல்லாது...
நீயாவது மனமிறங்கு!
உடனடியாக...
மழையை அனுப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.