சூரிய தாகம்: பேராசிரியர் கவிஞர் பு. மகேந்திரன்


வெயிலோ வெயில்
வெந்தது மாநிலம்
பொறுமையின் சின்னமாய் பூமாதேவி
பொங்கி எழுந்து ரெளத்திரம் கொள்ள
அனல் பறக்கும் காற்று.
அமைதி பறி போனது.
காடு மலைகள் குளங்கள்
வறண்டு போயின.
காற்று மாசுபடுதல் அதிகரித்தன
இமயமலையைத் தொடும் தூரத்தில்
பூகம்பமாய் பூமி பிளந்தது.
இறைவனுக்கு ஒரு ஆசை
இவ்வுலகில் மழை வேண்டி
முதியோரின் வாழ்க்கை
முதுகு எழும்பாய் சரிந்தது
வெயிலின் தாக்கத்தில்
நடைபயணம் செல்லலாமா
நடைபாதை சுருண்டு போனது
காலை மாலை என்ற வெயில்
காலம் காட்டி குறைந்திடுமே
மக்கள் மனது நிறைந்திடுமே
மலை பொழிந்து செழிந்திடுமே
வற்றாத குளங்கள்
வறண்டு போயின
இறையருள் பெற்று
இயற்கையைப் பாதுகாப்போம்
நேர்மைகள் மலரட்டும்
நேசிப்போம் சுற்றுச்சூழலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...