பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

சூரிய தாகம்: கோ. மன்றவாணன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

தூரத்தில் இருந்தபடியே
சூரியன் நாவு
எங்களூர்
குளத்து நீரைக்
குடித்துவிட்டது
மாயக் குழாய்போட்டு.

இப்படியே போனால்
கடல் திடல் ஆகும்
நம் ஒவ்வொருவருக்குள்ளும்
சுட்டுக்கொண்டிருக்கிறது
குட்டிச் சூரியன் ஒன்று

அதன்தாகம் தணிக்க
தீரா நதியொன்று தேவை
வேட்கை தீர்க்காது பூந்தேன் என்று
சிற்றோடை தேடிச் சோர்கிறது
பட்டாம்பூச்சிக் கூட்டம்

சூரியனின் எச்சில் பட்டிருக்குமோ...
இளநீர்க்குள்ளும்
சுடுநீரே!

வெய்யில் போர்த்திய என் பகலில்
உப்பளங்களும்
கொப்பளங்களும்

இந்த
வெய்யில் பூமிக்கு முகம்காட்ட
நிலவும் அஞ்சுகிறதாம்
அதன்
அழகிய முகத்திலும்
அம்மைப்புண் வந்துவிடுமோ என்று

தாகம் தீர்க்காத
வியர்வைக் கசிவு மட்டுமே
சூரியனின் மாற்றீடு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.