பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

சூரிய தாகம்: - ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

* தாகம்...
  தேவை என்பது
  இதன் பொருளாம்.

* சிலரின் தாகம்
   நினைத்தது கிடைத்துவிட்டால்   
   தீர்ந்து விடும.

* சூரியனும் அரசியல்வாதியும் 
   இந்த விஷயத்தில் ஒன்றுதான் 
   எப்போதும் தாகம் தீர்வதில்லை.

* மொத்த நீரைக் குடித்தும்
   தாகம் தீராமல்
   சுட்டெரிக்கிறது சூரியன்.

* அட்சய பாத்திரம் போல்
   கொடுத்துக் கொண்டேயிருந்தால்
   ஒருவேளை தீரலாம் சூரிய தாகம். 

* எப்போதும் மழை தரும் 
   அட்சய பாத்திரம் 
    மரம் தானே?

* மரம் நட்டு மழை பெற்று 
   சூரிய தாகம் தீர்ப்போம்
   சுகமாய் வாழலாம் நாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.