சூரிய தாகம்: - ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்


* தாகம்...
தேவை என்பது
இதன் பொருளாம்.
* சிலரின் தாகம்
நினைத்தது கிடைத்துவிட்டால்
தீர்ந்து விடும.
* சூரியனும் அரசியல்வாதியும்
இந்த விஷயத்தில் ஒன்றுதான்
எப்போதும் தாகம் தீர்வதில்லை.
* மொத்த நீரைக் குடித்தும்
தாகம் தீராமல்
சுட்டெரிக்கிறது சூரியன்.
* அட்சய பாத்திரம் போல்
கொடுத்துக் கொண்டேயிருந்தால்
ஒருவேளை தீரலாம் சூரிய தாகம்.
* எப்போதும் மழை தரும்
அட்சய பாத்திரம்
மரம் தானே?
* மரம் நட்டு மழை பெற்று
சூரிய தாகம் தீர்ப்போம்
சுகமாய் வாழலாம் நாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...