சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சுனாமியின் சுவடுகள்:  அழகூர். அருண். ஞானசேகரன்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

சுனாமியால்  அன்றைக்கு  தமிழகம்  கண்டிட்ட              சுவடுகள்  மறைந்திடும்  முன்னமதய்,       சோதனை  யாகவே  " தானே " வந்தது              சோகத்தில்  தமிழகம்  மூழ்கியதே !இனாமாய்  இன்றிங்கு  வந்தது  " வார்தா "              ஏன்தான்  இயற்கைக்கும்  வன்மனதோ ?       இத்தமிழ்  நாடதும்  செய்திட்டப்  பாவம்              என்னதான்,  அறியோம்  பராபரமே !வனாந்தரம்  அழிந்தது  கடும்புயல்  தன்னால்              வளர்ந்திட்ட  மரங்கள்  சாய்ந்ததென்ன ,        வகையாய்  நிழல்தந்த  மரங்கள்பல்  லாயிரம்              வளைந்தே  வீழ்ந்தன  மண்மேலே !அனாதைகள் என்றே  தெருவினில்  நின்றனர்             ஆயிரம்  ஆயிரம்  மக்களெல்லாம்,       ஆற்றொணாத்  துயர்தனை  கண்டோம்  நாமெலாம்,             ஆண்டுகள்  போயினும்  மறந்திடுமோ ?இயற்கை  யானதோர்  சுனாமி  என்றிட              யாரைக்  குறைசொல்லி  என்னபயன் ?செயற்கை  யானதோர்  சுனாமி  என்றிட             சிக்குவார்  எவரேனும்  ஒருவரதில் !உயர்ந்தநற்  பதவியில்  கல்லார்  என்றிட             உருவாகும்  செயற்கைச்  சனாமியும்;பயனற்ற  தாகிடும்  அன்னவன்  தலைமையும்             பாரதம்  இன்றிதைக்  காண்கிறதே!மக்களின்  வாழ்வினில்  சுனாமி  ஒன்றின்று            மறுமுறை  வந்ததும்  மோடியினால் !தக்கவன்  அவனில்லை  என்பதே  உண்மையாம்            தரங்கெட்ட  செயல்தனைக்  கண்டுணர்க !எக்காலம்  மக்கள்  மீண்டும்யின்  நாட்டினில்            இயல்பான  வாழ்வினைக்  கண்டிடுவார் ,அக்கரை  அற்றதோர்  மோடியின்  செயலால்            அவலத்தைக்  கண்டதே  மக்கள்நிலை !அரும்பாடு  பட்டுசேர்த்த  அத்தனைப்  பணத்தையும்நாம்திரும்பவும்  வங்கிதனில்  சேர்த்திட்டு  அதையெடுக்கபெரும்பாடு  படுகின்றோம்  பிரதமனாம்  மோடியினால்!வெறுப்புதனை  விதைத்திட்டான்,  வெல்வானோ  மோடியினி ?நாடிதனின்  மேல்பாய்ந்த  நரேந்திர  சனாமியால்கேடதுவே;  நன்மையெதும்  கிடையாதே !-- கோடிமக்கள்வாழ்வுதனை  இழந்தின்று  வருந்துகிறார்  அவர்கள்வாழ்வுதாழ்வுற்றதும்  ஏற்கத்தக்க  தா ?               

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.