சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சுனாமிச் சுவடுகள்:  பாவலர் கோ. மலர்வண்ணன்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

ஆழிப்பே ரலையென்று நமது முன்னோர்
    அழைத்ததைத்தான் இந்நாளில் சுனாமி என்பார்!
ஊழிக்கா லத்தில்தான் கடல்நீர் பொங்கி
    உலகத்தை மூழ்கடிக்கும் என்றே சொல்வார்!
மேழிக்கை உழவர்க்குப் புயலின் சீற்றம்
    மென்மேலும் துயரிழைத்துத் தொடரு தல்போல்
ஆழிப்பே ரலைதானும் கடலோ ரத்தில்
    அமைந்திருக்கும் ஊரவரை அச்சு றுத்தும்!

நிலநடுக்கம் கடல்பரப்பில் நிகழு மானால்,
    நீரலைகள் மேலெழுந்து கரையை நோக்கிக்
குலைநடுங்கச் செயும்வகையில் விரைந்து வந்து
    குப்பையென அனைத்தையுமே சுருட்டிக் கொண்டே
அலைகடலின் வயிற்றுக்குள் கொண்டு செல்லும்;
    ஆறாத துயரத்தைப் பரிசாய் நல்கும்!
விலைமதிக்க முடியாத உயிர்கள் தம்மை
    விருந்தாக்கிக் காலனையும் மகிழச் செய்யும்!

இரண்டாயி ரத்துநான்கு, திசம்பர் திங்கள்
    இருபத்தி ஆறாம்நாள் ஞாயி றன்று
பரந்துபட்ட ஆசியாவின் கருப்பு நாளாம்!
    பாங்கான சுமத்திராவின் கடல்ப ரப்பில்
மிரண்டோடிப் பதுங்குவகை நிலந டுக்கம்!
    மேலெழுந்த கடலலையோ வட்ட மிட்டுச்
சுரண்டுவார்தம் கையைப்போல் கரைக்கு நீண்டு
    சுனாமியெனப் பெயர்பெற்றுச் சிதைத்த தந்தோ!

இந்துபெருங் கடல்காணா அலைகள், தீமை
    இழைப்பதற்குத் தோன்றினவே! தொடர்ச்சி யாக
இந்தோனே சியா,சோமா லியா,தாய் லாந்து,
    இலங்கை,மலே சியா,மியன்மார், மாலத் தீவு,
இந்தியாவென் றிருக்கின்ற நாட்டி லெல்லாம்
    எதிர்பாரா வண்ணம்பே ரழிவைச் செய்து
சிந்துகின்ற கண்ணீர்க்குக் காட்டாய் நின்று
    செஞ்சுனாமிச் சுவடுகளாய்த் திகழும் அந்தோ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.