வேலிதாண்டிய காற்று: ப. தாணப்பன்


தாகசாந்திக்குத் தண்ணீர்...
பட்டினிக்குப் பிடி சோறு...
உயிர்ப்பித்திட வருவாயென மாமழையே...
வேண்டிக் கொண்டதன் தவறென்ன?
தென்றலாய் வருடிச்செல்லும் நீ
ஆர்ப்பரித்த புயலாய் வன்கோபம் பூண்டது ஏனோ?
தூர்த்தெடுத்த நிலங்கள்...
மலடியாக்கிய நெகிழிகள்....
மூழ்கடிக்கப்பட்டப் போக்குப்பாதைகள் ....
எத்தனை எத்தனைப் பிழைகள் ..!
இடைவிடாது பெய்து
"நீரால் "
இழப்பை உணர்த்தி மீண்டெழும் முன்
காற்றாய் கவிழ்த்ததேன்?
மூச்சைத்தரும் தருமமே!
மூர்ச்சையாக்கினது போதுமே!
வேலிக்குள் பூட்டவியலா காற்றே!
பொறுமையாய் தவழ்ந்து
தென்றல் தா!
மீண்டெழ மென் சுவாசம் தா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...