வானமழை நீ எனக்கு: - கோ. மன்றவாணன்


இலக்கின்றி நான்நடந்தேன்
இருட்டுக்குள் தான்கிடந்தேன்
விளக்கொன்றை ஏற்றிவழி காட்டி வைத்தாய் – என்னுள்
விதவிதமாய் வண்ணங்கள் தீட்டி வைத்தாய்!
வறண்டுவிட்ட நிலமாக
வற்றிவிட்ட குளமாக
புரண்டுவிட்ட என்வாழ்வை மீட்டுத் தந்தாய் – ஒரு
புதுராக மெட்டமைத்துப் பாட்டுத் தந்தாய்!
ஊர்மதிக்க வில்லையடி
உள்ளத்தில் தொல்லையடி
வேர்நசிந்து நான்சாயும் போது வந்தாய் - உன்
மென்தோளில் எனைத்தாங்கி முத்தம் தந்தாய்!
அழகில்லை பணிஇல்லை
அட,வாழ்வே இனிஇல்லை
இழவுவீட்டுப் பிணமானேன்; என்ன நினைத்தாய்? – ஓர்
இதயமாக உயிராக வந்து அணைத்தாய்!
உனைப்பார்த்து முளைவிட்டேன்
உனைநினைத்து இலைவிட்டேன்
வாழ்வதற்கே கிளைவிட்டேன் பெண்ணே பெண்ணே! – என்றும்
வானமழை நீஎனக்குக் கண்ணே கண்ணே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...