எதிர் காலக் கனவு : ம. அஹமது நவ்ரோஸ் பேகம்


எதிகாலக் கனவென ஏதும் எனக்கில்லையாதலால்
தோற்றுப் போகும் கனவினால் உண்டாகும்
வலியும், ஏமாற்றமும் எனக்கில்லை !
கனவுலகில் உயரே பறக்கும் பொழுது சிறகுகள்
உடைந்து விடுமோவென்ற அச்சமும் இல்லை,
கட்டுக்குள் வேலை செய்ய வேண்டுமென்ற கட்டாயமும் இல்லை.
நுரையீரலில் இருந்து அடுத்து வரும் காற்று மூச்சுக்
குழாயைத் தாண்டுமென்பது நிச்சயமில்லை என்பதால்
எதிர்காலம் என்பது நம் கையில் இல்லை.
கனவுகள் இல்லையென்றாலும் சோம்பல் இல்லை,
சுறுசுறுப்பு உண்டு, உழைப்பும் உண்டு !
நாம் யாராக இருந்தாலும், என்னவாக இருந்தாலும்
செய்யும் பணியில் விருப்பத்துடன் நம்மை
அர்பணித்துக் கொண்டால் கனவுகள் இல்லையென்றாலும்
வெற்றி நம்மை அலங்கரிக்கும் !
தூக்கம் கலையும் வரை மட்டுமே உயிர் வாழும்
கனவுகளை உதறித்தள்ளி வெளியே வந்து
உழைத்துப் பார்த்தால் மகிழ்ச்சி நமக்கு
மட்டுமல்ல, நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும்தான் !
வாழும் ஒவ்வொரு நொடியையும் நம்முடைய கடைசி
நொடியாகக் கருத்தில் கொண்டு அக்கம்,பக்கம்
பாராது கடமையே கண் எனப் பேணி நடந்தால்
நித்தம், நித்தம் நிஜமாகும் நம் நினைவுகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...