ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

வெஜிட்டபுள் இட்லி

செய்முறை: பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கு, கேரட் -பீன்ஸ் அனைத்தையும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

News image
Updated On :3 ஜூன் 2016, 5:52 am

தேவையானவை:

இட்லி மாவு - ஒரு கிண்ணம்

பச்சைப் பட்டாணி - 1/2 கிண்ணம்

பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் - 1/2 கிண்ணம்

உருளை கிழங்கு - 2 (பெரியது)

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மல்லித் தூள் - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கு, கேரட் -பீன்ஸ் அனைத்தையும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு,

சீரகம் தாளித்து பின்னர் வேகவைத்துள்ள காய்கறி கலவையைச் சேர்த்துப் பிரட்டி விட்டு, அரை உப்பு சேர்த்து கிளறவும். அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து, சிறிது தண்ணீரும் சேர்த்து பிரட்டி விட்டு கெட்டியானதும் இறக்கவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும், இட்லி தட்டில் முதலில் அரை கரண்டி மாவை குழியில் ஊற்றவும். அடுத்து   காய்கறி

மசாலாவை ஒரு தேக்கரண்டி எடுத்து வைத்து மேலே மீண்டும் அரை கரண்டி மாவை ஊற்றவும். இப்படியே இட்லி மாவை ஊற்றி வேக வைக்கவும். இட்லி வெந்ததும் எடுக்கவும். சுவையான வெஜிட்டபுள் இட்லி தயார். சட்னி, சாம்பாரோடு பரிமாறவும்.

***

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.