ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பட்டாணி மசாலா

முதலில் பச்சை பட்டாணியைக் குக்கரில் 3 விசில் விட்டு வேகவைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

News image
Updated On :12 ஜூலை 2016, 7:27 am

தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி - 1 கிண்ணம்

சீரகம் - அரை தேக்கரண்டி

இஞ்சிப் பூண்டு விழுது - 1

தேக்கரண்டி

வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

மல்லித் தூள் - அரைத் தேக்கரண்டி

கரம் மசாலா - அரைத் தேக்கரண்டி

கொத்துமல்லி - சிறிது

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

வெங்காயம் - 1 (நறுக்கியது)

தக்காளி - 3 (நறுக்கியது)

செய்முறை: முதலில் பச்சை பட்டாணியைக் குக்கரில் 3 விசில் விட்டு வேகவைத்து இறக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும். பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, அரைத்து வைத்துள்ள வெங்காயம் தக்காளி கலவையைச் சேர்த்து பச்சை வாசனைப் போக 3-4 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கிவிட்டு பிறகு, சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வதக்கி, வேக வைத்துள்ள பட்டாணியைச் சேர்த்து குறைவான தீயில் 5 நிமிடம் புரட்டி, கொத்துமல்லியைத் தூவி இறக்கினால், பட்டாணி மசாலா ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.