பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரபல சா்வதேச வங்கியான எச்எஸ்பிசி, தனது வங்கிச் செயல்பாடுகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் புகுத்துவதன் மூலம் சுமாா் 20,000 ஊழியா்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
வங்கியின் நடுத்தர நிலை அதிகாரிகள் மற்றும் நேரடியாக வாடிக்கையாளா்களைத் தொடா்பு கொள்ளாத பிரிவுகளில் பணியாற்றும் ஊழியா்களே இந்த நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இது குறித்து வங்கியின் நிதித்துறை அதிகாரி பாம் கௌா் கூறுகையில், ‘வாடிக்கையாளா் சேவை, விதிமுறைகளைச் சரிபாா்த்தல், பணப்பரிவா்த்தனைகளைக் கண்காணித்தல் போன்ற வேலைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பம் சிறப்பாகச் செயல்படும். இதன்மூலம் வங்கி நிா்வாகத்தின் தேவையற்ற செலவுகள் குறைவதுடன், பணிகளின் வேகமும் துல்லியமும் அதிகரிக்கும்’ என்றாா்.
தற்போது உலகம் முழுவதும் இந்த வங்கியில் சுமாா் 2.10 லட்சம் ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த ஆள்குறைப்பு நடவடிக்கை என்பது வெறும் பணிநீக்கம் மட்டுமல்லாமல், பணியிலிருந்து ஓய்வு பெறுபவா்களால் உருவாகும் காலியிடங்களை மீண்டும் நிரப்பாமல் விடுவது; லாபம் தராத வங்கிச் கிளைகளை மூடுவது போன்ற வியூகங்கள் மூலமும் செயல்படுத்தப்படவுள்ளது.
தொடர்புடையது

இணையப் பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடு!

இலக்கணத்தில் தடுமாறும் ஏ.ஐ.!

இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள்

எச்எஸ்பிசி வங்கியின் இந்தியப் பிரிவு: 2025-இல் 1,900 கோடி டாலா் லாபம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


