அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

நடப்பு நிதியாண்டில் வணிக வாகனத் துறை மிதமான வளர்ச்சியை எட்டும்: ஐசிஆர்ஏ

இந்தியாவில் வணிக வாகனத் துறையின் வளர்ச்சி 4 முதல் 6% வரையிலான மிதமான வளர்ச்சியை எட்டும் என்றுது ஐசிஆர்ஏ.

News image

ICRA

Updated On :26 ஜூன் 2026, 7:42 pm IST

புதுதில்லி: 2027 நிதியாண்டில் இந்தியாவில் வணிக வாகனத் துறையின் வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 4 முதல் 6 சதவீதம் வரையிலான மிதமான வளர்ச்சியை எட்டும் என்று ஐசிஆர்ஏ கணித்துள்ளது.

நடுத்தர மற்றும் கனரக வணிக வாகனங்கள் மற்றும் இலகுரக வணிக வாகனங்கள் ஆகிய பிரிவுகளில் முறையே 1 முதல் 3 சதவீதமும் மற்றும் 6 முதல் 8 சதவீதம் என்ற அளவிலான ஆண்டு வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், பேருந்து பிரிவில் 7 முதல் 9 சதவீதம் வளர்ச்சி இருக்கும்.

தொடர்ச்சியான உள்கட்டமைப்புச் செலவுகள், மேம்பட்ட சரக்கு போக்குவரத்து மற்றும் பழைய வாகனங்களை மாற்றுவதற்கான தேவை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், உயரும் எரிபொருள் செலவுகள் மற்றும் நிதியுதவி பெறுவதில் உள்ள சவால்கள் ஆகியவை முக்கியத் தடைகளாக நீடிக்கிறது.

இந்த ஆண்டின் மே மாதம், வணிக வாகன மொத்த விற்பனையானது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 13.5 சதவீத வளர்ச்சியுடன் இருந்த நிலையில், கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது இது 1.1 சதவீத சரிவாகும்.

2026 மே மாதம், உள்நாட்டு வணிக வாகனங்களின் சில்லறை விற்பனையானது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 5.3 சதவீத மிதமான வளர்ச்சியாக உள்ளது. அதே வேளையில் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 18.3 சதவீதம் சரிவு.

Summary

Indian commercial vehicles industry is expected to register a moderate YoY growth of 4-6 per cent.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.