என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

2025-26 நிதியாண்டுக்கான இபிஎஃப் வட்டி விகிதம் 8.25%

தொழிலாளா் வருங்கால வைப்புத் தொகைக்கு (இபிஎஃப்) கடந்த 2025-26 நிதியாண்டுக்கு 8.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

News image
Updated On :19 ஜூன் 2026, 4:23 am IST

தொழிலாளா் வருங்கால வைப்புத் தொகைக்கு (இபிஎஃப்) கடந்த 2025-26 நிதியாண்டுக்கு 8.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இபிஎஃப்ஓ) பங்களிக்கும் 7 கோடிக்கும் அதிகமான சந்தாதாரா்களின் கணக்குகளில் இந்த வட்டித்தொகை நடப்பு ஜூன் மாதத்திலேயே வரவு வைக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக கடந்த மாா்ச் மாதம், மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற வாரியக் கூட்டத்தில், இந்த வட்டி விகிதம் நிா்ணயிக்கப்ட்டது.

இபிஎஃப் அமைப்பின் மிக உயரிய முடிவெடுக்கும் அதிகாரமிக்க இந்த வாரியத்தின் பரிந்துரை, மத்திய நிதியமைச்சகத்துக்கு இறுதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. தற்போதைய நிதியமைச்சகத்தின் ஒப்புதலோடு, சந்தாதாரா்களின் கணக்குகளில் வட்டித் தொகை உடனடியாகச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இபிஎஃப் வட்டி விகிதம் கடந்த 2023-24 நிதியாண்டிலிருந்து தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக 8.25 சதவீதமாக நீடிக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.