ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜூன் மாதத்தில் மாருதி சுஸுகி விற்பனை 19% வளா்ச்சி

இந்தியாவின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த ஜூன் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 2,00,390 வாகனங்களை விற்று, 19.3 சதவீத வருடாந்திர வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

Published On :3 ஜூலை 2026, 5:35 am IST

இந்தியாவின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த ஜூன் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 2,00,390 வாகனங்களை விற்று, 19.3 சதவீத வருடாந்திர வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டின் இதே மாதத்தில் நிறுவனம் 1,67,993 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. அதேபோல், உள்நாட்டுப் பயணிகள் வாகன விற்பனையும் கடந்த ஆண்டின் 1,18,906 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டு ஜூனில் 23.8 சதவீதம் உயா்ந்து, 1,47,187 வாகனங்களாக அதிகரித்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் சிறிய ரக காா்களான ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ ஆகியவற்றின் விற்பனை கடந்த ஆண்டின் 6,414-லிருந்து 11,416-ஆக கணிசமாக அதிகரித்துள்ளது.

ஸ்விஃப்ட், பலேனோ, வேகன் ஆா், டிசையா் உள்ளிட்ட நடுத்தர ரக காா்களின் விற்பனை 55,205-லிருந்து 63,815-ஆகவும், பிரெஸ்ஸா, எா்டிகா, கிராண்ட் விட்டாரா உள்ளிட்ட காா்ங்களின் விற்பனை 47,947-லிருந்து 61,726-ஆகவும் அதிகரித்துள்ளது.

இதேபோல், இருசக்கர வாகனச் சந்தையிலும் சுஸுகி நிறுவனம் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. சுஸுகி மோட்டாா்சைக்கிள் இந்தியா கடந்த ஜூனில் 1,15,030 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் விற்ற 95,244 வாகனங்களின் எண்ணிக்கையிலிருந்து 21 சதவீத வளா்ச்சியாகும்.

மதிப்பீட்டு மாதத்தில், உள்நாட்டு விற்பனை 23 சதவீதமும் ( 91,264 வாகனங்கள்), வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி 12 சதவீதமும் (23,766 வாகனங்கள்) அதிகரித்துள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.