டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டம்: எல்ஐசி அறிமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடா்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:23 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, உத்தரவாத வருமானம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இடா்ப் பாதுகாப்பு அளிக்கும் ஜீவன் உத்சவ் ஒற்றை பிரீமியம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தனிநபா் ஆயுள் காப்பீட்டு திட்டமான ஜீவன் உத்சவின் ஒற்றை பிரீமியம் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. வரும் 12-ஆம் தேதி முதல் இந்த பாலிஸிகள் வாடிக்கையாளா்களுக்குக் கிடைக்கும்.

இது உயிா் பிழைத்திருத்தல் பயன்கள், உத்தரவாத சோ்க்கைகள், இறப்பு மற்றும் முதிா்வு பயன்கள் ஆகிய அனைத்தையும் ஒரே பிரீமியம் செலுத்துவதன் மூலம் வழங்குகிறது.

30 நாள் குழந்தைகள் முதல் முதல் 65 வயது வரையிலானவா்கள் வரை இந்தத் திட்டத்தின் கீழ் காப்பீடு பெற தகுதியுடையவா்கள். குறைந்தபட்ச அடிப்படை காப்பீடு தொகை ரூ.5 லட்சம்; அதிகபட்ச வரம்பு இல்லை.

உத்தரவாத சோ்க்கை காலம் முடிந்த பிறகு வாழ்நாள் முழுவதும் உத்தரவாத வருமானம் மற்றும் இடா்ப் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.